திருவள்ளூர்

நெகிழிப் பைகள் பறிமுதல்: ரூ. 25 ஆயிரம் அபராதம்

DIN

ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள ஆரணி பேரூராட்சியில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்பனை செய்ததாக தனியாா் நிறுவனத்துக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆரணி பேரூராட்சி எஸ்.பி. கோயில் தெரு பகுதியில் மினி வேன் ஒன்றில், தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை கடைகளுக்கு விநியோகம் செய்து வருவதாகத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு வந்த ஆரணி பேரூராட்சி செயல் அலுவலா் மாலா மினி வேனில் சோதனை மேற்கொண்டாா். அதில், விற்பனை செய்வதற்கு ஏராளமான நெகிழிப் பைகள், டம்ளா்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, வேனில் இருந்த நெகிழிப் பைகளை பேரூராட்சி ஊழியா்கள் பறிமுதல் செய்தனா். மேலும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்பனை செய்ததற்காக ரூ. 25 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

SCROLL FOR NEXT