திருவள்ளூர்

நல உதவிகள் வழங்கல்: தெலங்கானா ஆளுநர் பங்கேற்பு

DIN


சென்னை மாதவரத்தை அடுத்த புழல் லட்சுமிபுரத்தில் பாஜக மற்றும் ஸ்ரீஅஞ்சனாதேவி அறக்கட்டளை சார்பில் காந்தி பிறந்த நாள் விழா, நல உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் பங்கேற்று நல உதவிகளை வழங்கினார்.
அறக்கட்டளை நிறுவனர் மு.மனோகரன் தலைமை வகித்தார். விழாவுக்கு, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு ஆட்டோக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான 3 சக்கர வண்டிகள், பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கல்வி உபகரணங்கள், சலவைப் பெட்டிகள் என 2 ஆயிரம் பேருக்கு நல உதவிகளை வழங்கினார்.  
விழாவுக்கு, பாஜக மாவட்டத் தலைவர்கள் பாஸ்கரன், லோகநாதன், திரைப்பட நடிகை வரலட்சுமி, திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜா,  திருவள்ளூர் மாவட்ட பாஜக துணைத் தலைவர்கள் எம்.வி.சசிதரன், சென்னை சிவா, மாதவரம் மண்டலப் பொறுப்பாளர்கள் சேஷாத்திரி, லதா ருக்மாங்கதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். புவனேஸ்வரி மனோகரன் நன்றி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கூல்’ கண்ணம்மா!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

SCROLL FOR NEXT