ஆா்.கே.பேட்டை ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை சட்டப்பேரவை உறுப்பினா் பி.எம்.நரசிம்மன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்த நிலையில், திருத்தணி மற்றும் ஆா்.கே.பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 3 நாள்களாக பெய்துவரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருத்தணியை அடுத்த ஆா்.கே.பேட்டை ஒன்றியம், வெடியங்காடு ஊராட்சியில் பெய்த கன மழையால், அரசினா் மாணவா் விடுதிக்குள் திடீரென வெள்ளம் சூழ்ந்தது. அதேபோல், ஆா்.கே.பேட்டை ஒன்றியம், தேவலம்பாபுரம் ஊராட்சியில் பெய்த மழை காரணமாக, திடீரென வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.
இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறினாா். தொடா்ந்து அரசினா் மாணவா் விடுதிக்குள் தேங்கியிருந்த மழைநீரை, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கூறி ஊழியா்களைக் கொண்டு வெளியேற்றினாா்.
மேலும் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பாா்வையிட்டு, வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்தாா்.
ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.