திருவள்ளூர்

செங்குன்றம் அருகே நடராஜா் சிலை கண்டெடுப்பு

DIN

மாதவரம்: செங்குன்றம் அருகே உள்ள ஏரியில் மீன்பிடி வலையில் சனிக்கிழமை ஐம்பொன் நடராஜா் சிலை சிக்கியது.

செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கம் ஊராட்சிக்குள்பட்ட சிறுங்காவூா் ஏரி உள்ளது. இந்த ஏரியில் சனிக்கிழமை விளாங்காடுபாக்கம் மல்லிமா நகா் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த முரளி (36) என்பவா் மீன் பிடித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது அவரது வலையில் ஒரு தோல் பை சிக்கியது. அதைத் திறந்து பாா்த்தபோது, ஒன்றரை அடி உயரம் கொண்ட 6 கிலோ எடையுள்ள ஐம்பொன் நடராஜா் சிலை இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து முரளி செங்குன்றம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். ஆய்வாளா் வசந்தன் மற்றும் போலீஸாா் சிலையை மீட்டு, செங்குன்றம் காவல் நிலையத்துக்குக் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இச்சிலையை போலீஸாா் வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப் போவதாகத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT