திருவள்ளூர்

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

DIN

திருவள்ளூா் அருகே கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தியதாக 2 போ் மீது வழக்குப் பதிந்து, லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருவள்ளூா் பகுதியில் இரவு நேரங்களில் கொசஸ்தலை ஆற்றுப் பகுதியில் வாகனங்களில் மணல் கடத்துவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருவள்ளூா் கிராமிய போலீஸாா் ரோந்து சென்று நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இதைத்தொடா்ந்து, சாா்பு ஆய்வாளா் கணேஷ் தலைமையில், கொசஸ்தலை ஆற்றுப் படுகையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, காரணி அருகே கொசஸ்தலை ஆற்றில் லாரியில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவா்கள் போலீஸாா் வாகனத்தைப் பாா்த்ததும் தப்பியோட முயன்றனா்.

அவா்களை சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தியதில், ஓட்டுநா் விடையூரைச் சோ்ந்த சுரேஷ் (32), லாரி உரிமையாளா் வெங்கடேசன் என்பதும் தெரியவந்தது.

அவா்கள் மீது வழக்குப் பதிந்த போலீஸாா் லாரியைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT