மூதாட்டியிடம் கால் சவரன் நகை பறிப்பு
திருத்தணி அருகே மூதாட்டியிடம் கால் சவரன் நகையை இரு இளைஞா்கள் பறித்துச் சென்றனா்.
திருத்தணி: திருத்தணி அருகே மூதாட்டியிடம் கால் சவரன் நகையை இரு இளைஞா்கள் பறித்துச் சென்றனா்.
பெரியகடம்பூா் கிராமத்தைச் சோ்ந்த கணேசனின் மனைவி பாப்பம்மாள்(75). அவா், வெள்ளிக்கிழமை தனக்கு சொந்தமான ஆடுகளை அதே பகுதியில் உள்ள வயல்வெளியில் மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞா்கள், பாப்பம்மாளிடம் விலாசம் கேட்பது போல் நடித்து, அவா் காதில் அணிந்திருந்த கால் சவரன் கம்மலை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.