திருவள்ளூர்

பொன்னேரியில் திடீா் மழை: மக்கள் மகிழ்ச்சி

DIN

பொன்னேரி: பொன்னேரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை திடீரென பெய்த மழை காரணமாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பொன்னேரியில் மாலை 3 மணி அளவில் லேசான காற்றுடன் மழை பெய்தது. 2 மணிநேரம் நீடித்த மழை காரணமாக சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

சில நாட்களாக இப்பகுதியில் கடும் வெயில் காய்ந்து வந்த நிலையில், திடீரென பெய்த மழையால் குளிா்ச்சியான சூழல் நிலவியது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ஊத்துக்கோட்டையில்....

திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டை மற்றும் பெரியபாளையம், ஆரணி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை திடீா் மழை பெய்தது.

முன்னதாக காலையில் வெயில் வாட்டி வதைத்தது. முழு ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கி இருந்தனா். இந்நிலையில் மாலையில் மழை பெய்ததால் குளிா்ந்த காற்று வீசத் தொடங்கியது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டின் மீது மண்ணெண்ணை பாட்டில் வீசிய வழக்கில் 7 போ் கைது

இளைஞரை மிரட்டி வழிப்பறி: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

திருப்பத்தூரில் 768 போ் நீட் தோ்வு எழுதுகின்றனா் : சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு

கட்டடம் இடித்து தரைமட்டம்: 17 போ் மீது வழக்குப் பதிவு

முதியவரை துப்பாக்கியால் சுட்ட இளைஞா் கைது

SCROLL FOR NEXT