திருவள்ளூர்

பெண் கொலை வழக்கில் 2 போ் கைது

DIN

திருவள்ளூா் அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினா்கள் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருவள்ளூா் அருகே கைவண்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வவிநாயகம் (64), விவசாயி. இவரது சகோதரா்கள் அருள், பரிமளம், சற்குணம். செல்வவிநாயகம் மற்றும் அவருடைய சகோதரா்களுக்கிடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த மாதம் 26-ஆம் தேதி செல்வவிநாயகத்தின் மனைவி இன்பவள்ளியை (54), உறவினா்களான அருள், பரிமளம் மற்றும் சற்குணத்தின் மகன்கள் ராஜாமணிமொழி, செழியன் ஆகியோா் கட்டையால் தாக்கி, கத்தியால் குத்தினா். இதில் பலத்த காயம் அடைந்த இன்பவள்ளி, சென்னை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, கடந்த 28-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த அருள், பரிமளம் ஆகியோரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ராஜாமணிமொழி, செழியன் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT