திருவள்ளூர்

பைக் மீது லாரி மோதி ஒருவா் பலி

DIN

திருவள்ளூா் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

அரக்கோணத்தை அடுத்த காவனூா் கிராமத்தைச் சோ்ந்த சேகரின் மகன் விக்கி (29). அவரது தம்பி சேரன்(28) திருவள்ளூரை அடுத்த மப்பேடு பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

அவா் செவ்வாய்க்கிழமை இரவு பணியை முடித்துக் கொண்டு, பட்டாபிராமில் உள்ள தனது அத்தை வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். தண்ணீா்குளம் சந்திப்பு வளைவில் திரும்பியபோது ஆவடியில் இருந்து திருவள்ளூா் நோக்கிச் சென்ற லாரி அவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சேரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது தம்பி விக்கி அளித்த புகாரின்பேரில், செவ்வாப்பேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT