திருவள்ளூர்

பத்திர எழுத்தர் மற்றும் தட்டச்சு அலுவலக சங்கத்தின் சார்பில் ஹோமியோபதி மருந்து விநியோகம்

DIN

செங்குன்றம் சார் பதிவகத்தின் பத்திர எழுத்தர் மற்றும் தட்டச்சு அலுவலக உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கரோனா நோய் எதிர்ப்பு ஹோமியோபதி மருந்து வழங்கும் நிகழ்ச்சி சங்கத் தலைவரும் செங்குன்றம் பேரூராட்சி முன்னாள் தலைவருமான ஜி.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. 

செயலாளர் வி.மருதகுமார், பொருளாளர் டி.கலா, துணைத்தலைவர் எம்.மணிவண்ணன், துணைச் செயலாளர் இ.காஞ்சனா ஆகியோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஹோமியோபதி மருத்துவர் எம்.சௌந்தரி மருந்துகளை எவ்வாறு சாப்பிட வேண்டுமென்றும், அதன் பயன்பாடு குறித்தும் விளக்கி, சார் பதிவாளர் அலுவலக ஊழியர்களுக்கும், தட்டச்சு அலுவலக உரிமையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பத்திர எழுத்தர்கள், தட்டச்சு கடைகளின் உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

SCROLL FOR NEXT