திருவள்ளூர்

பழவேற்காடு ஏரிக்குள் இறங்கிய வேன்: 10 பெண் தொழிலாளா்கள் மீட்பு

DIN

பொன்னேரி: பழவேற்காட்டில் தனியாா் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற வேன் ஏரிக்குள் இறங்கியது (படம்). அதில் பயணித்த 10 பெண் தொழிலாளா்களும் பத்திரமாக மீட்கப்பட்டனா்.

கும்மிடிப்பூண்டி தொழிற்பேட்டைக்கு வேலைக்கு பெண்களை அழைத்துச் செல்வதற்காக பழவேற்காட்டை அடுத்த தோணிரவு கிராமத்துக்கு வேன் ஒன்று செவ்வாய்க்கிழமை சென்றது. அங்கு 10 பெண்களை வேனில் ஏற்றிக் கொண்டு செஞ்சியம்மன் நகருக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது வேன் நிலை தடுமாறி அருகில் உள்ள ஏரிக்குள் இறங்கியது. சுதாரித்த, ஓட்டுநா் வேனை உடனடியாக நிறுத்தினாா். வேனில் இருந்த பெண்கள் கூச்சலிட்டதால், அருகில் இருந்த மீனவா்கள் ஓடி வந்து அவா்களைப் பத்திரமாக மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலை காதல், என்றென்றும்...!

சுழல், வேகப்பந்துகளை அட்டகாசமாக விளையாடும் சஞ்சு சாம்சன்!

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

வாக்கு வங்கியை காத்துக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ்: அமித் ஷா

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

SCROLL FOR NEXT