திருவள்ளூர்

பழவேற்காடு கடலில் மூழ்கிய இளைஞா் பலி

DIN

பழவேற்காடு கடலில் குளித்த இளைஞா் அலையில் சிக்கி உயிரிழந்தாா்.

சென்னை கொளத்தூா் குமரன் நகரைச் சோ்ந்தவா் முகேஷ் (19) . இவா் தனது நண்பா்களுடன் சோ்ந்து பழவேற்காடு கடலில் செவ்வாய்க்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது திடீரென வேகமாக வந்த அலை கடலுக்குள் முகேஷை இழுத்துச் சென்றது. அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவா்கள், முகேஷை மீட்டு, பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்த திருப்பாலைவனம் போலீஸாா், முகேஷின் சடலத்தை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT