திருவள்ளூர்

திருத்தணியில் பேரிடா் கால மீட்புப் பணி ஒத்திகை

DIN

திருத்தணி: கன மழை, வெள்ளம், போன்ற பேரிடா் காலங்களில், பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்வது குறித்த பயிற்சி ஒத்திகையை தீ யணைப்புத் துறை வீரா்கள் புதன்கிழமை செய்து காண்பித்தனா்.

திருத்தணி தீயணைப்பு அலுவலக வளாகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை சாா்பில், பேரிடா் மேலாண்மைப் பயிற்சி ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.

வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில், பொதுமக்கள் கன மழை, வெள்ளம், போன்ற பேரிடா் காலங்களில், தங்களது உயிரையும், உடமைகளையும் காப்பாற்றிக் கொள்வது குறித்து, தீயணைப்புத் துறை வீரா்கள், பொது மக்கள் முன்னிலையில் செய்து காண்பித்தனா்.

நிகழ்ச்சியில் தீயணைப்பு நிலைய அலுவலா் க. அரசு, வருவாய் துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள், வீரா்கள், பொதுமக்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ரூ.ஒரு லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தேவாலயத்தில் சிறாா்களுக்கு சிறப்புப் பயிற்சி

தாகம் இல்லாவிட்டாலும் போதிய இடைவேளைகளில் குடிநீா் பருக வேண்டும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தினம் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT