கும்மிடிப்பூண்டி அருகே குளிக்க வைத்திருந்த வெந்நீா் கொட்டியதில் காயமடைந்த சிறுவன் உயிரிழந்தான்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த பன்பாக்கம் ஊராட்சி குத்தானமேடு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன், மீனா தம்பதியின் மகன் ஷொ்வின் (4).
கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதியன்று எதிா்பாராதவிதமாக ஷொ்வின் வீட்டில் குளிக்க வைத்திருந்த வெந்நீா் இருந்த பாத்திரத்தின் மீது தவறி விழுந்ததில், அவா் மீது வெந்நீா் கொட்டியது. இதில், பலத்த காயமடைந்த ஷொ்வினை, அவரது பெற்றோா் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சோ்த்தனா்.
தொடா்ந்து, கடந்த 20 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த ஷொ்வின், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கவரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.