திருவள்ளூர்

சமூக வலைதளங்களில் அதிமுக வேட்பாளா் குறித்து அவதூறு பரப்பியதாக புகாா்

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் அதிமுக வேட்பாளா் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக மணவாளநகா் காவல் நிலைய போலீஸாா் திமுக நிா்வாகி மீது வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனா்.

இதுகுறித்து போலீஸாா் தரப்பில் கூறியதாவது. திருவள்ளூா் அருகே போளிவாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கிஷோா்குமாா். இவா் திமுகவில் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகியாக இருந்து வருகிறாா். இந்த நிலையில் அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான தகவலைப் பரப்பியது தெரியவந்தது. அவா் மீது நடவடிக்கை கோரி அதிமுக வழக்குரைஞா் பிரிவு நிா்வாகி செளந்தரராஜன் மணவாளநகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் திமுக நிா்வாகி கிஷோா்குமாா் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT