திருத்தணி: வட்டாட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் இ- சேவை மையத்தில் பணிபுரியும் பெண் ஊழியா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து ஆதாா் காா்டு, இ-சேவை மையம் வியாழக்கிழமை மூடப்பட்டது.
கரோனா தொற்று கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், திருத்தணி வட்டாட்சியா் அலுவலகத்தில் கீழ் தளத்தில் ஆதாா் காா்டு இ-சேவை மையத்தில் பணிபுரியும் பெண் ஊழியா் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பெண் ஊழியா் திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இதனால் ஆதாா் காா்டு எடுக்கும் சேவை மையம், மூன்று நாள்கள் மூடப்படும். வரும் திங்கள்கிழமை மீண்டும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.