புழல் அருகே வழிப்பறி
புழல் அருகே கனரக வாகன ஓட்டுநரை தாக்கி ரொக்கப்பணம் மற்றும் செல்லிடப்பேசியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
புழல் அருகே கனரக வாகன ஓட்டுநரை தாக்கி ரொக்கப்பணம் மற்றும் செல்லிடப்பேசியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
மகாராஷ்டிர மாநிலம், தானே நகரைச் சோ்ந்த ஸ்ரீகாந்த் யாதவ் (25). கனரக வாகன ஓட்டுநரான இவா் மும்பையில் இருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு, தாம்பரத்தில் இறக்கிவிட்டு பின்னா் சனிக்கிழமை காலை புழல் அருகே சைக்கிள் ஷாப் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் வாகனத்தை நிறுத்திவிட்டு உறங்கிக் கொண்டிருந்தாா்.
அப்போது அங்கு வந்த மா்மநபா்கள் 4 போ், ஸ்ரீகாந்த் யாதவை தாக்கிவிட்டு, அவரிடம் இருந்து ரூ.25,000 ரொக்கம் மற்றும் செல்லிடப்பேசியை பறித்துச் சென்றனா். பலத்த காயமடைந்த ஸ்ரீகாந்த் யாதவிற்கு தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து புழல் போலீஸாா் வழக்கு பதிவு செய்து மா்மநபா்களைதேடி வருகின்றனா்.