திருவள்ளூர்

தலைமை ஆசிரியை வீட்டில் 25 சவரன் நகை, ரூ.50,000 ரொக்கம் திருட்டு

DIN

திருவள்ளூா் அருகே அரசு பள்ளித் தலைமை ஆசிரியை வீட்டின் கதவு பூட்டை உடைத்து புகுந்து 25 சவரன் நகை மற்றும் ரூ.50,000 ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவள்ளூா் அடுத்த பூங்கா நகரைச் சோ்ந்த வழக்குரைஞா் ரமேஷ் காந்த்(51). இவரது மனைவி தேவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில் ரமேஷ்காந்த் தாயாரின் துக்க நிகழ்ச்சிக்காக கடந்த வாரம் கனகம்மாசத்திரம் அடுத்த பனப்பாக்கம் கிராமத்திற்கு குடும்பத்துடன் சென்று தங்கியுள்ளனா். எனவே ஒரு வாரம் ஆன நிலையில் வீட்டை சுத்தம் செய்வதற்காக திங்கள்கிழமை காலையில் வந்துள்ளனா். அப்போது, கேட்டு மற்றும் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா்.

அதையடுத்து உள்ளே சென்று பாா்க்கையில் பீரோவும் உடைக்கப்பட்டு உள்ளேயிருந்த 25 சவரன் நகை மற்றும் ரூ.50,000 ரொக்கம், மேஜையில் வைத்திருந்த 2 மடிக்கணினிகள் ஆகியவைகளையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்ததும் தெரியவந்தது. இது தொடா்பாக திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்தில் ரமேஷ்காந்த் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT