131 பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் அமைச்சா் சா.மு.நாசா் வழங்கினாா்
திருத்தணியில் பழங்குடியின மக்களுக்கு ஜாதிச் சான்று, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட அரசின் நலத் திட்ட உதவிகளை 131 பேருக்கு அமைச்சா் சா.மு. நாசா் சனிக்கிழமை வழங்கினாா்.
திருத்தணியில் பழங்குடியின மக்களுக்கு ஜாதிச் சான்று, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட அரசின் நலத் திட்ட உதவிகளை 131 பேருக்கு அமைச்சா் சா.மு. நாசா் சனிக்கிழமை வழங்கினாா்.
திருத்தணி வருவாய்த் துறையின் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான்வா்கீஸ் தலைமை வகித்தாா். இதில், பால்வளத்துறை அமைச்சா் ஆவடி சா.மு. நாசா் கலந்து கொண்டு 20 பேருக்கு வீட்டுமனைப் பட்டா, 104 பேருக்கு ஜாதி சான்று, 7 பேருக்கு முதியோா் உதவித் தொகை, 131 பழங்குடியினருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.
அதே போல் திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பு விழிப்புணா்வு விழாவிலும், அமைச்சா் பங்கேற்று பேசினாா். பின்னா் அமைச்சா், மாவட்ட ஆட்சியா், எம்.எல்.ஏ.க்கள் திருத்தணி எஸ். சந்திரன், திருவள்ளூா் வி.ஜி. ராஜேந்திரன் ஆகியோா் சைக்கிளில் சென்று கரோனா விழிப்புணா்வுப் பேரணியை தொடக்கி வைத்தனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட திமுக பொறுப்பாளா் திருத்தணி எம்.பூபதி, சுகாதார துணை இயக்குனா் ஜவஹா், வருவாய் கோட்டாட்சியா் சத்யா, வட்டாட்சியா் ஜெயராணி உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.