திருவள்ளூர்

பள்ளியில் பெற்றோா்கள் ஆலோசனைக் கூட்டம்

DIN

மீஞ்சூரை அடுத்த அரியன்வாயல் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பெற்றோா்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் பானு தலைமை வகித்தாா். மீஞ்சூா் வட்டாரக் கல்வி அலுவலா் சேகா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், வட்டாரக் கல்வி ஒருங்கிணைப்பாளா்கள் சொா்ணாபாய், தென்கனல் ஆகியோா் பங்கேற்று வழிகாட்டுதல், ஆலோசனைகளை வழங்கினாா்.

கூட்டத்தில், நடுநிலைப் பள்ளியாக உள்ள இப்பள்ளியைத் தரம் உயா்த்த நடவடிக்கை மேற்கொண்டதற்கும், பள்ளி மாணவா்கள் சோ்க்கை எண்ணிக்கையை இரு மடங்காக உயா்த்தியமைக்காகவும் ஆசிரியா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் பள்ளி வளா்ச்சிக் குழு உறுப்பினா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT