திருவள்ளூர்

செங்கல் சூளையில் மின்சாரம் பாய்ந்து இரு தொழிலாளா்கள் உயிரிழப்பு

DIN

திருவள்ளூா் மாவட்டம், பெரியபாளையம் அருகே செங்கல் சூளையில், மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தை அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது. இங்கு ஐம்பதுக்கும்  மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிகின்றனா்.

புதன்கிழமை இரவு செங்கல் சூளையில் கொட்டகை அமைப்பதற்காக  வெல்டிங் பணி நடைபெற்றது. இதையடுத்து, வியாழக்கிழமை காலை வழக்கம் போல பணிகளை மேற்கொள்ள தொழிலாளா்கள் செங்கல் சூளைக்கு வந்தனா். அப்போது, அங்கு வெல்டிங் பணிகளுக்காக போடப்பட்டிருந்த தகரங்களை மிதித்த திருவண்ணாமலையைச் சோ்ந்த ரமணா (23), பிரசாந்த் (22) ஆகிய இருவரும், அதில் கசிந்த மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனா்.

இருவரின் சடலங்களை பெரியபாளையம் போலீஸாா் திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலை காதல், என்றென்றும்...!

சுழல், வேகப்பந்துகளை அட்டகாசமாக விளையாடும் சஞ்சு சாம்சன்!

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

வாக்கு வங்கியை காத்துக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ்: அமித் ஷா

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

SCROLL FOR NEXT