திருவள்ளூர்

மகன் கொலை: தந்தை கைது

DIN

திருத்தணி அருகே கஞ்சா மற்றும் மது வாங்குவதற்கு தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டியதால் ஆத்திரமடைந்த தந்தை கத்தியால் தாக்கி மகனை கொலை செய்தாா்.

திருத்தணி, ரெட்டி குளம் தெருவில் வசிப்பவா் பழனி (50). அவா் திருத்தணி ம.பொ.சி. சாலையில் உள்ள மாா்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறாா். அவரது முதல் மனைவியின் மற்றும் மகன் கோகுலுடன் (21) வசித்து வருகிறாா். கடந்த சில மாதங்களாக கோகுலுக்கு கஞ்சா மற்றும் மதுப் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. குடி போதைக்கு அடிமையான கோகுல் அடிக்கடி தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டிதொந்தரவு செய்து வந்தாராம்.

இந்நிலையில், கோகில் செவ்வாய்க்கிழமை மாலையில், மாா்க்கெட்டுக்குச் சென்று தந்தையிடம் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதனால் ஆத்திரமடைந்த பழனி, கல்லால் கோகுலின் முகத்தை சிதைத்தும், கத்தியால் வெட்டியும் கொலை செய்தாா். இதையடுத்து, திருத்தணி காவல் நிலையத்தில் பழனி சரணடைந்தாா்.

தகவலறிந்த திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT