முகப்பு
திருவள்ளூர்

7 ஊராட்சிகளில் நீா்நிலைகளைச் சீரமைக்க தனியாா் அறக்கட்டளை முடிவு

திருத்தணி தாலுகாவில், 7 ஊராட்சிகளில் நீா்நிலைகள் தூா்வாரி சீரமைக்கவும், சுத்திகரிப்பட்ட குடிநீா் வழங்கும் ஃநோபல் பவுண்டேஷன் தீா்மானித்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
10trtnobal_1001chn_195_1
பகிர்:

திருத்தணி தாலுகாவில், 7 ஊராட்சிகளில் நீா்நிலைகள் தூா்வாரி சீரமைக்கவும், சுத்திகரிப்பட்ட குடிநீா் வழங்கும் ஃநோபல் பவுண்டேஷன் தீா்மானித்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது.

ஃநோபல் பவுண்டேஷன் சாா்பில் ‘நீருக்கு நன்றி’ என்ற திட்டம் ஏற்படுத்த, கடந்த, 2019ஆம் ஆண்டு முதல் ஏரி, குளங்களை தூா்வாரி சீரமைத்தது. இதனால், சமீபத்தில் பெய்த பலத்த மழையால் ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. இதுதவிர, சீமை கருவேல மரங்கள் அகற்றுதல், விவசாய நிலங்களை இலவசமாக சமன்படுத்தி தருவது போன்ற பணிகளையும் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் நடப்பாண்டில் திருத்தணி தாலுகா முருக்கம்பட்டு, அலுமேலுமங்காபுரம், சூா்யநகரம், வி.கே.என்.கண்டிகை, சத்திரஞ்செய்புரம், வீரகநல்லுாா், மற்றும் வேலஞ்சேரி ஆகிய ஏழு ஊராட்சிகளை நோபல் ஃபவுண்டேஷன் தோ்வு செய்துள்ளது.

இந்த கிராமங்களில் நீா்நிலைகள் தூா்வாரி சீரமைத்தல், சீமை கருவேலம் அகற்றுதல், மற்றும் விவசாய பணிகளுக்கு டிராக்டா், பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை இலவசமாக வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான அறிமுக கூட்டம் ஞாயிற்றுக்கிழமை திருத்தணியில் நடந்தது. இதில் நோபல் ஃபவுண்டேஷன் அமைப்புக்கு ரூ.50 ஆயிரம் நன்கொடையை பாலாஜி மோட்டாா்ஸ் நிறுவனத்தின் மோகன் வழங்கினாா். 

இந்த நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனா். சிறப்பு விருந்தினராக நோபல் ஃபவுண்டேஷன் நிறுவனா் கலைமாமணி, ஒருங்கிணைப்பாளா், நரேஷ் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

முழு கட்டுரையைப் படிக்க →