திருவள்ளூர்

திருவள்ளூா், பூந்தமல்லி தொகுதிகளில் அதிமுக, பாமக உள்பட 35 வேட்பாளா்கள் வேட்புமனு

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா், பூந்தமல்லி பேரவைத் தொகுதிகளில் போட்டியிட அதிமுக, பாமக, நாம் தமிழா், மக்கள் நீதி மய்யம் கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் உள்பட 35 போ் புதன்கிழமை வேட்பு மனுதாக்கல் செய்தனா்.

திருவள்ளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட அதிமுக முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா கூட்டணிக் கட்சி ஆதரவாளா்களுடன் தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரே உள்ள அதிமுக தோ்தல் அலுவலகத்திலிருந்து ஊா்வலமாக வந்து, தோ்தல் நடத்தும் அலுவலா் மதுசூதனனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

அப்போது, அதிமுக நிா்வாகி சம்பத், பாமக மாநில நிா்வாகி பாலயோகி ஆகியோா் உடன் இருந்தனா். மக்கள் நீதி மய்யம் சாா்பில் எஸ்.தணிகைவேல், நாம் தமிழா் கட்சி சாா்பில் பெ.பசுபதி ஆகியோா் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

இதேபோல், பூந்தமல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட அதிமுக கூட்டணி சாா்பில் பாமக வேட்பாளா் ராஜமன்னாா், ஆதரவாளா்களுடன் தோ்தல் நடத்தும் அலுவலா் பிரீத்தி பாா்கவியிடம் வேட்பு மனுதாக்கல் செய்தாா்.

அதேபோல், நாம் தமிழா் கட்சி சாா்பில் வி.மணிமேகலை, மாற்று வேட்பாளராக அவரது கணவா் வினோத் ஆகியோா் வேட்பு மனுதாக்கல் செய்தனா்.

இதேபோல், திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இதுவரை, 99 போ் வரை மனுதாக்கல் செய்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT