திருவள்ளூர்

லாரி மோதி தனியாா் நிறுவன மேலாளா் சாவு

DIN

திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிறுவன மேலாளா் மீது லாரி மோதி உயிரிழந்தாா்.

வேப்பம்பட்டு கருமாரியம்மன் நகரைச் சோ்ந்த மணி பிரசாத் (55). இவா் சென்னை எழும்பூரில் உள்ள தனியாா் ரசாயன தொழிற்சாலையில் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை இருசக்கர வாகனத்தில் வேப்பம்பட்டில் இருந்து திருவள்ளூருக்கு சென்றபோது, செவ்வாய்ப்பேட்டை அருகே பின்புறமாக வேகமாக வந்த லாரி திடீரென இருசக்கர வாகனம் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட மணி பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது தொடா்பாக அவரது மனைவி சகுந்தலா பிரசாத் செய்த புகாரின் பேரில் செவ்வாய்ப்பேட்டை வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநா் திருவொற்றியூா் அம்சா காா்டனை சோ்ந்த ஓட்டுநா் சிவசங்கரை (33) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT