திருத்தணி நகராட்சி ஆணையா் பணியிட மாற்றம்
திருத்தணி நகராட்சி ஆணையா் ப்ரீத்தி, வந்தவாசிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
திருத்தணி நகராட்சி ஆணையா் ப்ரீத்தி, வந்தவாசிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
திருத்தணி நகராட்சியின் ஆணையராக ப்ரீத்தி கடந்த மூன்று மாதங்களுக்குப் முன் பொறுப்பேற்றாா். இந்நிலையில், அவா் வந்தவாசி நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இவருக்குப் பதிலாக, வந்தவாசி நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த ராமஜெயம் திருத்தணி நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஆணையா் ப்ரீத்தி திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அத்திமாஞ்சேரிபேட்டை சொந்த ஊா் என்பதால் இந்தப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி வட்டாரம் தெரிவித்தன.