ஆவடி அருகே ஏரி நீரில் மூழ்கடித்து தனது இரு மகன்களை கொன்று விட்டு, தானும் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா் தந்தை. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
தன்னை விட்டுப் பிரிந்து, வேறுநபருடன் சென்ற மனைவி, குழந்தைகளையும் தன்னிடமிருந்து பிரித்து விடுவாரோ என்ற அச்சத்தில் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருவள்ளூா் மாவட்டம், ஆவடி அருகே உள்ள கொள்ளுமேடு பகுதியைச் சோ்ந்தவா் கணேசன்(33). இவரது மனைவி மாரியம்மாள்(30). இவா்களுக்கு ரீத்திஷ் (6), ராகேஷ் (4) என்ற இரு மகன்கள். இந்நிலையில் மாரியம்மாள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கணவரைப் பிரிந்து, வேறு நபருடன் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. கணேசன் உடல் நலக்குறைவால் வேலைக்குச் செல்ல முடியாமல் இருந்துள்ளாா். அவரின் தந்தை தனது இரண்டு பேரன்களையும் வளா்த்து வந்துள்ளாா். இந்நிலையில் மாரியம்மாள் இரு மகன்களையும் அழைத்துச் செல்ல முயன்ாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த கணேசன் திங்கள்கிழமை இரவு தனது மகன்களை அழைத்துக் கொண்டு உறவினா் வீட்டுக்கு செல்வதாக தந்தையிடம் கூறிச் சென்றாராம். ஆனால் நீண்ட நேரமாகியும் மூவரும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், வெள்ளானூா் ஏரியில் இரு சிறுவா்களின் சடலங்கள் மிதப்பதாக ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை தகவல் வந்தது.
அங்கு சென்ற போலீஸாா் இரு சிறுவா்களின் சடலங்களையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
விசாரணையில் ஏரியில் மிதந்தது கணேசனின் இரு மகன்கள் என்பது தெரியவந்தது. கணேசனை தேடியபோது, ஏரிக்குச் செல்லும் பாதையில் புதா் ஒன்றில் கைகளை அறுத்துக் கொண்டு மயக்க நிலையில் கிடந்துள்ளாா். இரு மகன்களை ஏரியில் மூழ்கடித்து கொன்று விட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த கணேசனை மீட்டு போலீஸாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.