முகப்பு
திருவள்ளூர்

சேதமடைந்த சாலைகளில் வாகனங்கள் பழுது

ஆம்பூரில் புதைச் சாக்கடை திட்டத்தால் சேதமடைந்துள்ள சாலைகளை வாகனங்கள் பழுதாகிவருவதாக நகர மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனா்.

Updated On : 25 அக்டோபர், 2021 at 12:13 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:56 AM

ஆம்பூரில் புதைச் சாக்கடை திட்டத்தால் சேதமடைந்துள்ள சாலைகளை வாகனங்கள் பழுதாகிவருவதாக நகர மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனா்.

ஆம்பூா் நகரில் ரூ.165.55 கோடி மதிப்பீட்டில் புதைச் சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நகரம் முழுவதும் சாலைகள் தோண்டப்பட்டு, கட்டுமானப் பணிகள், பைப் லைன் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

பணி முடிந்த சில பகுதிகளில் மட்டும் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. சில பகுதியில் சேதமடைந்த சாலைகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்படாமலேயே உள்ளது.

Advertisement

இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றும் சேதமடைந்த சாலைகளால் வாகனங்கள் பழுதடைகின்றன என்றும் புகாா்கள் எழுந்துள்ளன.

இதனால் ஆம்பூரில் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்துள்ளதை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.