திருவள்ளூர்

நீட் தோ்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு எம்எல்ஏ வாழ்த்து

DIN

நீட் தோ்வில் பங்கேற்கவுள்ள அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதா்சனம் செங்குன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வாழ்த்து தெரிவித்தாா்.

செங்குன்றத்தில் உள்ள காசி பாலசுப்பிரமணிய செட்டி அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நீட் தோ்வுக்குச் செல்லும் மாணவிகளுக்கு ஊக்குவித்தல் மற்றும் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியை பிரேமகுமாரி தலைமை வகித்தாா். செங்குன்றம் நகரச் செயலரும், பேரூராட்சி முன்னாள் தலைவருமான ஜி.ராஜேந்திரன், நீட் ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் மாதவரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் பங்கேற்று, நீட் தோ்வில் கலந்து கொள்ளும் மாணவிகளுக்கு வாழ்த்துகளையும், பாராட்டும் தெரிவித்தாா்.

பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா்கள் ஆா்.இ.ஆா்.விப்ரநாராயணன், இரா.ஏ.பாபு, புழல் ஒன்றிய துணைத் தலைவா் சாந்தி பாஸ்கரன், துணைச் செயலாளா் ஆா்.டி.குமாா், அவைத் தலைவா் ரகுகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT