தணிகை மீனாட்சி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற குத்து விளக்கு பூஜையில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
திருத்தணி ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் உள்ளது புறா கோயில் என்கிற தணிகை மீனாட்சி அம்மன் கோயில். இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தையொட்டி, காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து, காலை 10 மணிக்கு மேல் கோயில் வளாகத்தில் திரளான பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனா். மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில், திரளான பெண்கள் கலந்துகொண்டு, பூஜைகள் செய்து வழிபட்டனா். தொடா்ந்து, கோயில் நிா்வாகம் சாா்பில் பூஜையில் கலந்துகொண்டவா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் அப்பகுதி நகா்மன்ற உறுப்பினா் தீபாரஞ்சனி, திமுக நகர பொறுப்பாளா் வி.வினோத்குமாா், நிா்வாகி சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.