ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் விளையாடுவாரா?
ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் வீரர் மிட்செல் ஸ்டார்க் முதல் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் வீரர் மிட்செல் ஸ்டார்க் முதல் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இன்னும் 5 நாள்களில் தொடங்கவுள்ளது. மார்ச் 28 ஆம் தேதி நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்த்து விளையாடுகிறது.
ஐபிஎல் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளூம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. வெளிநாட்டு வீரர்கள் அவர்களது அணியுடன் இணைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், தில்லி கேபிடல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அந்த அணியுடன் இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பிலிருந்து மிட்செல் ஸ்டார்க்கிற்கு இதுவரை தடையில்லாச் சான்று வழங்கப்படவில்லை. ஆனால், ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஸ்டார்க் அணியில் இணைந்துவிடுவார் என்பதில் தில்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் நம்பிக்கையுடன் உள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணி வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி அதன் முதல் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த போட்டிக்கு முன்பாக மிட்செல் ஸ்டார்க் அணியில் இணைந்துவிடுவார் எனக் கூறப்படுகிறது.
முதல் போட்டிக்கு முன்பாக மிட்செல் ஸ்டார்க் அணியுடன் இணையத் தவறும் பட்சத்தில், அவருக்குப் பதிலாக முதல் போட்டியில் நடராஜன் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.