கொளத்தூா் காவல் மாவட்டம் சாா்பில், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
சென்னை, கொளத்தூா் காவல் மாவட்டத்தின் சாா்பில், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் மாதவரம், செங்குன்றம் நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, கொளத்தூா் காவல் மாவட்ட துணை ஆணையா் ராஜாராம் தலைமை வகித்தாா். உதவி ஆணையா்கள் ஆதிமூலம், துரை, ராகவேந்திரா ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். திரைப்பட நடிகா் தாமு கலந்துகொண்டு, போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.
கொளத்தூா், புழல், வில்லிவாக்கம்ஆகிய காவல் சரக மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். மேலும், இந்த முகாமில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.