குண்ணத்தூா் ஸ்ரீமுனீஸ்வரா் கோயிலில் வருஷாபிஷேகம்
குண்ணத்தூா் முனீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற 6-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
குண்ணத்தூா் முனீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற 6-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
திருத்தணியை அடுத்த குண்ணத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுனீஸ்வரா் கோயிலின், 6-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை விமரிசையாக நடந்தது. இதையொட்டி யாக சாலை அமைத்து சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. பின்னா், மூலவா் முனீஸ்வரா், விநாயகா், ஆதிமுனீஸ்வரா், கருமாரியம்மன் ஆகிய சந்நிதிகளில், பிரபைகள் பிரதிஷ்டை செய்து கலசநீா் ஊற்றி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன.
கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனா். இதில், நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.