கூட்டணி உறுதியாகுமா? புதுவையில் திமுக - காங்கிரஸ் இடையே இறுதிக்கட்ட பேச்சு!
புதுவையில் திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை பற்றி...
புதுவையில் திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு முடிந்த நிலையில் புதுவையில் இழுபறி நீடித்து வருகிறது.
கூட்டணி முடிவாகாததால் திமுக, காங்கிரஸ் இரு கட்சிகளும் தனித்தனியே வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றன. மார்ச் 23 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
புதுவையில்காங்கிரஸ் தலைமையில்தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறிவரும் நிலையில் முடிவு எட்டப்படாமல் உள்ளது.
இந்நிலையில் கூட்டணி தொடர்பாக திமுக - காங்கிரஸ் இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுவதாக தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே என். ஆர். காங்கிரஸ் - பாஜக இடையே கூட்டணி இழுபறி நீடித்த வந்த நிலையில் கூட்டணி உறுதியாகியுள்ளது, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.