காங்கிரஸ் கூட்டணி முறிவு: நாடாளுமன்றத்தில் இருக்கைகளை மாற்றித்தரக் கோரிய கனிமொழி!
காங்கிரஸுடனான கூட்டணி முறிவினால் நாடாளுமன்றத்தில் இருக்கைகளை மாற்றித்தரக் கோரி அவைத் தலைவருக்கு கனிமொழி கடிதம்...
காங்கிரஸுடனான கூட்டணி முறிவினால் நாடாளுமன்றத்தில் இருக்கைகளை மாற்றித்தரக் கோரி மக்களவைத் தலைவருக்கு கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியமைக்க சில கட்சிகளின் ஆதரவைக் கோரியுள்ளது.
திமுக கூட்டணியில் 5 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தவெகவுக்கு ஆதரவளிப்பதாகக் கூறி புதிய கூட்டணியையும் உருவாக்கியுள்ளது. வரும் நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் தவெக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றும் அறிவித்துள்ளது.
Advertisement
இது திமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு திமுகவினர் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தற்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் இருக்கைக்கு அருகே திமுக எம்.பி.க்களின் இருக்கை இருக்கிறது. காங்கிரஸ் கட்சியுடன் தற்போது கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளதால் இருக்கைகளை மாற்றித்தர வேண்டும் என்று கோரியுள்ளார்.