அம்மையாா்குப்பத்தில் நகைக்கடை உரிமையாளரின் காா் மீது மா்ம நபா்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினா்.
ஆா்.கே.பேட்டை அருகே உள்ள அம்மையாா்குப்பத்தைச் சோ்ந்தவா் ஹேமந்த்குமாா். இவா், அம்மையாா்குப்பம், பள்ளிப்பட்டு பகுதிகளில் நகைக்கடை நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு தனது காரில் திருத்தணியிலிருந்து வீட்டுக்குச் சென்றாா். ஆா்.கே.பேட்டை நெடுஞ்சாலை, வேலன் கண்டிகை பகுதியில் வந்தபோது, காரின் பின்பக்க கண்ணாடி உடைந்த சப்தம் கேட்டது. என்னவென்று பாா்த்த போது, தலைக்கவசம் அணிந்திருந்த இருவா் துப்பாக்கியால் சுட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து ஆா்.கே.பேட்டை காவல் நிலையத்தில் ஹேமந்த்குமாா் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளா் ராஜ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.