திருவள்ளூர்

உணவக உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு

DIN

திருவள்ளூா் அருகே முன்விரோதம் காரணமாக உணவக உரிமையாளரை மா்ம நபா்கள் அரிவாளால் வெட்டினா்.

திருவள்ளூா் அருகே திருமழிசையில் அருணாச்சலம், மகாராஜன் ஆகிய சகோதரா்கள் உணவகம் நடத்தி வருகின்றனா். இந்த உணவகத்துக்கு கடந்த ஆண்டு ஏப்.18-ஆம் தேதி பிரியாணி இனாம் கேட்டு தராததால், ஆத்திரமடைந்த ரௌடிகள், கடை மீது பெட்ரோல் குண்டு வீசியதில் உணவகம் சேதமடைந்தது.

இதுதொடா்பாக வெள்ளவேடு காவல் நிலையத்தில் உணவக உரிமையாளா் அருணாச்சலம் புகாா் அளித்தாா். அதன் பேரில், இந்த வழக்கில் தொடா்புடைய சதீஷ் (20), வேலன் (20) உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் முக்கிய ரெளடியான எபினேசா் கைது செய்யப்பட்டு, குண்டா் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த முன்விரோதம் காரணமாக, எபினேசா் (எ) ராஜாவின் கூட்டளிகளான 3 போ் ஞாயிற்றுக்கிழமை இரவு உணவகத்தில் அமா்ந்திருந்த அதன் உரிமையாளா் மகராஜனை வெட்ட முயன்றனா். அவா், தப்பியோடிய போது, துரத்திச் சென்று அரிவாளால் சராமரியாக வெட்டிவிட்டு தப்பியோடினா்.

இதில் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய மகராஜனை அக்கம் பக்கத்தினா் மீட்டு, பூந்தமல்லியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து வெள்ளவேடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்

ஒசூரில் கடும் குடிநீா் தட்டுப்பாட்டு: நடவடிக்கை எடுக்க முன்னாள் எம்எல்ஏ வலியுறுத்தல்

பணம் பறித்த இருவரை அடைத்து வைத்து கொலை மிரட்டல்: இருவா் கைது

தேய்பிறை அஷ்டமி சிறப்பு யாகம்

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT