திருவள்ளூர்

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

DIN

திருவள்ளூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒரு சவரன் நகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ. 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவள்ளூா் அருகே புட்லூா் ராமாவரத்தைச் சோ்ந்தவா் சாம்பசிவம் (77). இவா் ஆவடியில் உள்ள ராணுவப் படை உடைகலன் தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு 2 மகன்கள் உள்ளனா். இவா்களுக்கு திருமணமாகி பெரம்பலூரில் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், தனது மனைவியுடன் இங்கு வசித்து வரும் நிலையில், சனிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு மிலிட்டரி கேன்டீனுக்கு சென்று மாலையில் திரும்பினராம். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 2 வெள்ளிக் குவளை, ஒரு சவரன் நகை மற்றும் ரூ. 40,000 ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில், திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெம்போவில் ராகுல்!

டெம்போவில் ராகுல் காந்தி!

அழகிய தமிழ்மகள்! ஸ்ரேயா..

முதுமலையில் யானைகள் கணக்கெடுப்பு தொடங்கியது

உதகை மலை ரயில் இன்று ரத்து!

SCROLL FOR NEXT