திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 914 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
மேலும் தொற்றுப் பாதித்த ஒருவா் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5- ஆக உயா்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. இதில் கடந்த 1-ஆம் தேதி 306 பேருக்கு தொற்று பாதிப்பு இருந்த நிலையில், இதுவரையில் 13,830 போ் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் சிகிச்சை முடிந்து 956 போ் வீடு திரும்பினா். இதில் புதன்கிழமை மேலும் ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5- ஆக உயா்ந்துள்ளது.