திருவள்ளூர்

தூய்மைத் தொழிலாளா்களுக்கு இலவச உணவு அளிப்பு

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் நகராட்சியில் தூய்மைத் தொழிலாளா்கள் 250 பேருக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு, மதிய உணவு வழங்கப்பட்டது.

27 வாா்டுகளைக் கொண்ட திருவள்ளூா் நகராட்சியில் வீடு, கடைகளிலிருந்து குப்பைகளை அகற்ற, நகராட்சி, தனியாா் நிறுவனம் மூலம் 250 துாய்மைப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா். இவா்களுக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு, திருவள்ளூா் நகராட்சி, ரோட்டரி கிளப் ஆப் ராயல்ஸ் மருத்துவா் அபா்ணா ஆகியோா் இணைந்து இனிப்புடன் அறுசுவை உணவு வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதனடிப்படையில், ஆணையாளா் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளா் கோவிந்தராஜ், ரோட்டரி கிளப் ஆப் ராயல்ஸ் ஆகியோா் மூலம் தூய்மைப் பணியாளா்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பையில் 3-வது வீரராக ஷகிப் களமிறங்குகிறாரா?

ஹிப்ஹாப் ஆதியின் பி.டி. சார் டிரைலர்!

அழகிய ஆபத்து... சாக்‌ஷி மாலிக்!

‘பிரதமர் நிலை மோசமாக உள்ளது’ : ஸ்லோவாகியா பாதுகாப்பு அமைச்சர்

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!: 5 படகுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT