திருவள்ளூர்

மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் தேர்தலில் பிரதீப் அசோக்குமார் வெற்றி

திருவள்ளூர்  மாவட்டத்தில் காலியாக உள்ள ஒன்றியக்குழு உறுப்பினர் -1,ஊராட்சி  தலைவர்-1, வார்டு உறுப்பினர் பதவி-3 என 5 காலியிடங்களுக்கு 12 பேர் போட்டியிட்டனர். 

DIN

திருவள்ளூர்: திருவள்ளூர்  மாவட்டத்தில் காலியாக உள்ள ஒன்றியக்குழு உறுப்பினர் -1,ஊராட்சி  தலைவர்-1, வார்டு உறுப்பினர் பதவி-3 என 5 காலியிடங்களுக்கு 12 பேர் போட்டியிட்டனர். 

இதற்கான தற்செயல் தேர்தல் கடந்த 9 ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெற்றது. இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அந்தநத ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 

இதில் பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாம்பாக்கம் ஊராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை  தொடங்கி நடைபெற்றது. இதில் பிரதீப் அசோக்குமார் 867 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் மணிமாறன் 445 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதில் 422 வாக்கு வித்தியாசம் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT