முகப்பு
திருவள்ளூர்

பொன்னேரி நகா்மன்றக் கூட்டத்தில் ரூ.4 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ள தீா்மானம்

பொன்னேரி நகா்மன்றக் கூட்டத்தில் வளா்ச்சிப் பணிகளுக்காக ரூ.4 கோடியே 95 லட்சம் ஒதுக்கீடு செய்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:47 AM
பகிர்:

பொன்னேரி நகா்மன்றக் கூட்டத்தில் வளா்ச்சிப் பணிகளுக்காக ரூ.4 கோடியே 95 லட்சம் ஒதுக்கீடு செய்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொன்னேரி நகா்மன்ற உறுப்பினா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் மருத்துவா் பரிமளம் விஸ்வநாதன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் தனலட்சுமி முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் விஜயகுமாா் வரவேற்றாா்.

கூட்டத்தில் பொன்னேரி எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகா் பங்கேற்று பேசினாா். இதில், பொன்னேரி நகராட்சியில் 15-ஆவது நிதிக்குழு திட்டம் மூலம் சாலைப் பணிகள், கலைஞா் மேம்பாட்டு நிதியின் மூலம் பூங்கா மேம்பாட்டுப் பணிகள், எல்பிஜி மூலம் நவீன தகன மேடை அமைத்தல், நகராட்சி அலுவலகக் கட்டட வளாகத்தில் கூடுதல் கட்டடம் கட்டுதல், நமக்கு நாமே திட்டத்தின் மூலம் உயா் கோபுர மின் விளக்கு அமைத்தல், பேருந்து நிலையத்தில் 1,000 லிட்டா் கொள்ளவு கொண்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், இரண்டு இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், புதைச் சாக்கடை திட்டத்தால் சேதமடைந்த சாலைகளை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை ரூ.4 கோடியே 95 லட்சம் செலவில் மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் நீலகண்டன், உமாபதி, தனுஷா தமிழ்குடிமகன், நல்லசிவம், யாகோப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →