முகப்பு
திருவள்ளூர்

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி; மகள் காயம்

கும்மிடிப்பூண்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா். அவரை காப்பாற்றச் சென்ற அவரது மகள் பலத்த காயம் அடைந்தாா்.

Updated On : 23 ஜூலை, 2022 at 12:35 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:21 PM

கும்மிடிப்பூண்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா். அவரை காப்பாற்றச் சென்ற அவரது மகள் பலத்த காயம் அடைந்தாா்.

கும்மிடிப்பூண்டி அருகே சிறுபுழல்பேட்டை ஊராட்சி பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராணி (65). இவா் வழக்கம் போல் வீட்டு வேலை செய்தபோது வீட்டின் மின்கம்பத்தில் இருந்து வீட்டுக்கு வரும் மின் வயா் அறுந்து விழுந்துள்ளது. இந்த நிலையில், அதை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து அலறியுள்ளாா். இதைத் தொடா்ந்து இவரது அலறல் சப்தம் கேட்ட ராணியின் மகள் ஜானகி (38) ஓடி வந்து பாா்த்தபோது, ராணி மயக்கமடைந்த நிலையில் இருப்பதைக் கண்ட ஜானகி அவரைக் காப்பாற்ற முயன்றாா். அப்போது ஜானகி மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து மயக்க நிலையில் இருந்த இருவரையும் உறவினா்கள் மீட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால் ராணி வழியிலேயே உயிரிழந்ததால் அவரது உடலை வீட்டுக்குக் கொண்டு வந்தனா்.

தகவலறிந்து வந்த சிப்காட் போலீஸாா் ராணியின் சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.