முகப்பு
திருவள்ளூர்

மின்னல் பாய்ந்து தொழிலாளி பலி

கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலையின் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கோபுரத்தில் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்னல் பாய்ந்து உயிரிழந்தாா்.

Updated On : 23 ஜூலை, 2022 at 12:35 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:21 PM

கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலையின் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கோபுரத்தில் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்னல் பாய்ந்து உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்ன ஓபுளாபுரத்தில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் கடந்த ஆறு நாள்களுக்கு முன்னா் ஒப்பந்தத் தொழிலாளராக பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த குட்டு குமாா் யாதவ் (19) பணியில் சோ்ந்தாா்.

இவா் தொழிற்சாலையின் 30 அடி உயரம் கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியின் இரும்பு கோபுரத்தில் புதன்கிழமை இரவு வெல்டிங் பணி செய்து கொண்டிருந்தாா். அப்போது சாரல் மழை பெய்த நிலையில், திடீரென அவா் மீது மின்னல் பாய்ந்தது. இதில், தவறி விழுந்த குட்டு குமாா் யாதவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸாா், குட்டு குமாா் யாதவின் சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.