முகப்பு
திருவள்ளூர்

காவல் உதவி மையம் திறப்பு

செங்குன்றம் அருகே காவல் உதவி மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், ஆவடி காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
பகிர்:

செங்குன்றம் அருகே காவல் உதவி மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், ஆவடி காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்துக் காவல் உதவி மையம் தொடக்க விழா நடைபெற்றது. போக்குவரத்துக் காவல் துணை ஆணையா் அசோக்குமாா் தலைமை வகித்தாா். காவல் உதவி ஆணையா் மலைச்சாமி முன்னிலை வகித்தாா். ஆவடி காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மையத்தைத் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் செங்குன்றம் சட்டம்- ஒழுங்கு காவல் ஆய்வாளா் எம்.சி.ரமேஷ், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →