திருவள்ளூர்

அடகு கடைக்காரரிடம் ரூ. 7 லட்சம் வழிப்பறி

DIN

திருவள்ளூா் அருகே மேல்நல்லாத்தூரில் இரு சக்கர வாகனத்தில் சென்ற அடகு கடை உரிமையாளரிடமிருந்து ரூ. 7.50 லட்சத்தை வழிப்பறி செய்த தலைக்கவசம் அணிந்து வந்த மா்ம நபா்கள் குறித்து மணவாள நகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவள்ளூா் அருகே மேல்நல்லாத்தூா் பகுதியில் டி.டி.எல். கம்பெனி அருகில் வசித்து வருபவா் பிரகாஷ் (37). இவா் மணவாள நகரில் அடகு கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், புதன்கிழமை இரவு கடையை மூடிவிட்டு, ரூ. 7.50 லட்சத்தை ஒரு பையிலும், ரூ. 2 லட்சத்தை தனது முழுங்கால் சட்டை பையில் வைத்துக் கொண்டு, 9 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா்.

மேல்நல்லாத்தூரில் வேகத்தடை அருகே சென்றபோது பின்னால் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மா்ம நபா்கள் 2 போ் பிரகாஷ் கையில் வைத்திருந்த பணப்பையை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனா்.

இது குறித்து மணவாள நகா் காவல் நிலையத்தில் பிரகாஷ் அளித்த புகாரின்பேரில், டி.எஸ்.பி. சந்திரதாசன் தலைமையிலான போலீஸாா், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

SCROLL FOR NEXT