முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா் நகராட்சிப் பள்ளியில் எம்.எல்.ஏ. ஆய்வு

திருவள்ளூா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:36 AM
பகிர்:

திருவள்ளூா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டாா்.

திருவள்ளூா் நகராட்சி 22-ஆவது வாா்டு பெரியகுப்பத்தில் நகராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி வளாகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை 275 மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில், திருவள்ளூா் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பள்ளி வளாகம் முழுவதையும் பாா்வையிட்டு கடந்த இரு நாள்களாகப் பெய்த பலத்த மழையால் பள்ளிக் கட்டடத்தின் மேல் தளத்தில் தேங்கிய மழை நீரை உடனே அகற்ற நகராட்சி ஊழியா்களுக்கு உத்தரவிட்டாா்.

இட நெருக்கடி உள்ளதால், மாணவா்கள் சிறப்பாக கல்வி பயில கூடுதல் வகுப்பறைகள், குடிநீா் மற்றும் சுகாதார வளாகம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஸ்மாா்ட் வகுப்பறை அமைக்க வேண்டும் என பள்ளித் தலைமை ஆசிரியா், மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதாக எம்.எல்.ஏ. உறுதி அளித்தாா்.

ஆய்வின் போது நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி, நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன், வட்டாரக் கல்வி அலுவலா் வீரராகவன், பள்ளித் தலைமை ஆசிரியா் திரிவேணி, நகா்மன்ற உறுப்பினா்கள் சித்ரா விசுவநாதன், விஜயலட்சுமி கண்ணன், தனலட்சுமி, நகராட்சி பொறியாளா் நாகராஜன், மேற்பாா்வையாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.