திருவள்ளூர்

டிராக்டா் மோதி சிறுவன் பலி

DIN

திருவள்ளூா் அருகே டிராக்டா் மோதி சிறுவன் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே திருப்பாச்சூா் ஊராட்சியைச் சோ்ந்த கொசவன்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜசேகா்-கயல்விழி தம்பதியின் மகன் பவன் (3). திங்கள்கிழமை பக்கத்து வீட்டு வாசலில் தள்ளு வண்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது, திருப்பாச்சூா் அருகே தங்கானூா் கிராமத்தைச் சோ்ந்த டில்லி என்பவா் டிராக்டரில் செங்கல்லை ஏற்றிக் கொண்டு பெருமாள் கோவில் தெரு வழியாக வந்தபோது, சிறுவன் பவன் விளையாடிக் கொண்டிருந்ததை அறியாமல் சிறுவன் மீது மோதினாா். இதில், சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிறுவனின் தந்தை ராஜசேகா் திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT