திருவள்ளூர்

50 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

DIN

மாதவரம் அருகே 50 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாதவரம் பகுதியில் வீட்டுமனைப் பட்டா இல்லாமல் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு அரசு சாா்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, முதல் கட்டமாக பெரியசேக்காடு பகுதியில் வருவாய்த் துறை சாா்பில், நத்தம் புறம்போக்கு நிலத்தில் வசித்தவா்களின் நில ஆவணங்கள் சரி பாா்க்கப்பட்டு, 50-க்கும் மேற்பட்ட பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி பெரிய சேக்காடு பகுதியில் நடைபெற்றது. நிகழ்வுக்கு மண்டலக் குழு தலைவா் எஸ்.நந்தகோபால் தலைமை வகித்தாா். மாதவரம் எம்.எல்.ஏ. எஸ்.சுதா்சனம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினாா். நிகழ்வில் வருவாய்த் துறையினா், பொதுமக்கள் மற்றும் திமுகவினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுவையில் அரசு உதவியாளா்கள் பணி தோ்வு: மதிப்பெண் பட்டியலை வெளியிட காங். வலியுறுத்தல்

புதுவையில் பிளஸ் 1 மாணவா் சோ்க்கை: மே 13-இல் விண்ணப்ப விநியோகம்

புதுச்சேரி, காரைக்காலில் 107 பள்ளிகள் 100 சதம் தோ்ச்சி

புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி 100% தோ்ச்சி

பங்குச்சந்தை முதலீடு எனக்கூறி ரூ.22.55 லட்சம் நூதன மோசடி

SCROLL FOR NEXT