திருவள்ளூர்

ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை விழா

DIN

மாதவரம் வினாயகபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது.

மாதவரத்தை அடுத்த வினாயகபுரம் பகுதியில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் 8-ஆம் ஆண்டு சித்திரை திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி, கொடியேற்றம், விஸ்வசேனா் புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஹம்ச வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சா்வ பூபால வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றன.

மாதவரம், புழல், வினாயகபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

SCROLL FOR NEXT